மின்சார அளவீடு செய்வதற்குச் சென்ற மின் ஊழியரை தாக்கிய வீட்டு உரிமையாளர்

0 360

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ரெகுநாயகிபுரம் கிராமத்தில் மின்வாரிய ஊழியர் ஐயப்பன்,என்பவர்அய்யாசாமி என்பவரின் வீட்டில் மின் அளவீடு செய்வதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது அவர் மின் கட்டணத் தொகையை கூடுதலாக சொல்வதாகக் கருதி ஆத்திரமடைந்த அய்யாசாமி அவரது உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு ஐயப்பனின் சட்டையைக் கிழித்து செங்கல்லால் அடித்ததால் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பனுக்கு மருத்துவமனையில் பெட் வசதி இல்லாததால் வெறும் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments