மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு மரியாதையுடன் சிறுவனின் உடல் நல்லடக்கம்..!

0 302
மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு மரியாதையுடன் சிறுவனின் உடல் நல்லடக்கம்..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த நித்திஷ் என்ற 16 வயது சிறுவனின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுவனின் இதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் கருவிழிகள், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் தோல் ஆகியவை மதுரை மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, மலர் வளையம் வைத்து, சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments