புரோக்கராக செயல்பட்ட கணவன், மணப்பெண்ணாக நடித்த மனைவி.. இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்து நகை-பணத்துடன் தப்பி ஓட்டம்..!

0 497
புரோக்கராக செயல்பட்ட கணவன், மணப்பெண்ணாக நடித்த மனைவி..இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்து நகை-பணத்துடன் தப்பி ஓட்டம்..!

திருமண புரோக்கராக செயல்பட்டு, கட்டிய மனைவியையே பலருக்கு திருமணம் செய்து வைத்து பணம்-நகையுடம் தப்பியோடிய கேரளாவைச் சேர்ந்தவரையும், அவரது மனைவியையும் தமிழக போலீசார் தேடி வருகின்றனர்.

மறுமணம் செய்ய பெண் தேடி வந்த தாராபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர்,கேரள பெண் இருப்பதாகக் கூறி சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் வீட்டினர் அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை பவுன் தங்க நகையும், புரோக்கருக்கு 80 ஆயிரம் ரூபாயும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாதவிடாய் என்று முதலிரவை தள்ளிப்போட்ட அந்தப் பெண், மறுநாள் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மாயமாகியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments