வந்தவாசி அருகே ஆந்த்ராக்ஸ் தாக்குதலால் மாடுகள் இறப்பு.. சில நாட்களுக்கு மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் என எச்சரிக்கை

0 241
வந்தவாசி அருகே ஆந்த்ராக்ஸ் தாக்குதலால் மாடுகள் இறப்பு.. சில நாட்களுக்கு மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் என எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்து விழுந்தன.

இதன் பேரில் பொன்னூர் என்ற கிராமத்தில் ஆடு, மாடுகளை பொது இடங்களில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என்று ஒலிப் பெருக்கி மூலம் அறிவித்த கால்நடைத்துறை அதிகாரிகள், மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளையும் துவக்கியுள்ளனர்.

மனிதர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பரவ வாய்ப்புள்ளதால், அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments