கடலூரில் சுலபமான முறையில் ஆன்லைனில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக மோசடி

0 260

செல்போனில் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் ஆவணங்கள் இன்றி, உடனடியாக தனிநபர் கடன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, OTPஐ பெற்று வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபகரித்து தொடர் மோசடியில் ஈடுபட்ட நபரை கடலூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.. இதுதொடர்பாக, பண்ருட்டியை சேர்ந்த இந்துமதி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த சுமையா ஜெய்புன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர்.

இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட கடலூர் சைபர் கிரைம் போலீசார், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்து, இணைய வழி குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments