திண்டுக்கல் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1,57,000 பறிமுதல்

0 202

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  10 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்.

அப்போது  கணக்கில் வராத  1 லட்சத்து 57ஆயிரம் ரூபாயைஅதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக  உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு ஆய்வாளர்கள் 7 பேர், ஊராட்சி அலுவலர்கள் 8 பேர் என மொத்தம் 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments