மர்மமான முறையில் இறக்கும் ஆடு, மாடுகள் - கலக்கத்தில் விவசாயிகள்

0 394
மர்மமான முறையில் இறக்கும் ஆடு, மாடுகள் - கலக்கத்தில் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் ஆடு, மாடுகள் மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், வெளியூரிலிருந்து மான் மற்றும் மயில் வேட்டைக்காக வரும் சிலர் வைக்கும் விஷ மருந்துகளை உண்டு இறப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டிய இந்த கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 11 மாடுகள், 5 ஆடுகள், இரண்டு மான்கள் இறந்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

ஆனால் ஆந்த்ராக்ஸ் நோயால் மாடுகள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் கால்நடை மருத்துவர்கள், அவற்றின் ரத்த மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments