போதைக்கு அடிமையாகி கடத்தல் கும்பலுக்கு உடந்தை... செல்போன் கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் பட்டதாரி இளம்பெண் கைது

0 468
போதைக்கு அடிமையாகி கடத்தல் கும்பலுக்கு உடந்தை... செல்போன் கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் பட்டதாரி இளம்பெண் கைது

சென்னையில் செல்போன் கடை உரிமையாளரை மது விருந்துக்கு அழைத்து காரில் கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் பறித்த சம்பவத்தில், வேலூரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணை பட்டினப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பர்மா பஜாரில் லேப்டாப், செல்போன் கடை வைத்துள்ள ஜாவீத் சைபுதீன் என்பவரை கடந்த 17ஆம் தேதி காருடன் கடத்திய கும்பல், 2 செல்போன், பணத்தை பறித்துகொண்டு சேத்துப்பட்டு அருகே விட்டுச்சென்றது.

இந்த வழக்கில் சோனியா என்ற பெண்ணை கைது செய்து விசாரித்தபோது, பணம் பறிக்கும் கும்பலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. ஜாவீத் வரவழைத்தால், 50 லட்சம் ரூபாயில் 5 சதவீதம் பங்கு தருகிறோம் எனக் கூறிவிட்டு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments