பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை.. உரிமையாளர் செய்த சம்பவம்..!

0 379
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை.. உரிமையாளர் செய்த சம்பவம்..!

ஈரோடு அருகே பூட்டியிருந்த தனது வீட்டின் கதவை உடைத்து புகுந்து 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியவர்களில் ஒருவரை வீட்டின் உரிமையாளரே போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தார்.

கன்னிமார் நகரைச் சேர்ந்த சண்முகன் வெளியூர் சென்று திரும்பிய நிலையில் தனது வீட்டிற்குள் ஆள்நடமாட்டம் இருந்ததால் பின்பக்கமாக சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்து இரண்டு பேர் ஓடியுள்ளனர்.

அவர்களை பிடிக்க துரத்திய சண்முகன் அக்கம்பக்கத்தார் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு புதரில் மறைந்திருந்த ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பிய ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments