சென்னை குரோம்பேட்டையில் ஒரே இரவில் நடந்த 2 கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

0 342

சென்னை குரோம்பேட்டையில் ஒரே இரவில் இருவேரு இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குரோம்பேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் தாமஸ், சபரி என்பவருக்கு கொடுத்த 30 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், சபரியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தாமஸை அரிவாளால் வெட்டி கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜாவை நேற்று இரவு சவாரிக்காக நின்றிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் ராஜா, முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments