சேலத்தில் காரை வேகமாக ஓட்டி இருசக்கர வாகனத்தில் சென்றவரை இடித்துத் தள்ளிய போதை ஆசாமிகள் 4 பேரிடம் போலீசார் விசாரணை

0 258

சேலம் டவுன் பகுதியில், முந்திச் செல்ல வழிவிடவில்லை என்று கூறி தனியார் பேருந்தின் முன் காரை நிறுத்தி பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த 4 பேர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தடைபட்ட நிலையில், அங்கு வந்த போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களை அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முன்னதாக, சின்ன திருப்பதி பகுதியில் காரை வேகமாக ஓட்டி, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை இடித்துக் கீழே தள்ளி தாக்கியதாகவும், டி.எம்.எஸ். பகுதியில் தங்களை வீடியோ எடுக்க முயன்ற முதியவர் உள்பட 3 பேரையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments