படிக்கிற வயசுல காதல்.. மாணவியை விரட்டி காதலித்த காதலன் குத்திக் கொலை..! ஒரே சாதியாஇருந்தாலும்.. கத்திக் குத்து தான் .!

0 980

ஈரோடு அருகே கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்

ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அடுத்த கிளாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். 21 வயதான இவர் பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் படிக்கிற வயசுல என்ன காதல் வேண்டி இருக்கு என்று இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக கோவில் திருவிழாவில் ஹரிஷ் தரப்பினருக்கும், காதலியின் சகோதரரான வெள்ளியங்கிரி என்பவரின் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது போலீசார் இருதரப்பையும் அழைத்து பேசி சாமாதனபடுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. தற்போது கல்லூரியில் படிக்கின்ற வெள்ளியங்கிரியின் சகோதரியை , ஹரிஷ் மீண்டும் விரட்டி விரட்டி காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று பெட்ரோல் வாங்கிவருவதக கூறிச்சென்ற ஹரிஷ், நண்பருடன் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு அருகில் உள்ள தோப்புக்குள் ஒதுங்கி உள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த காதலியின் உறவினர்கள் ஹரிஷிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் காதலை கைவிடச்சொல்லி ஹரிஷீன் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரீஷின் கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

கொலையாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலையில் படுத்து உருண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். காதலித்த இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக ஹரிஷ் குடும்பத்தினர் பின் தங்கி இருந்ததால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments