துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் மனு

0 359

குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு வீட்டு வேலைக்காக சென்ற தனது மனைவியை அங்கிருப்பவர்கள் கொடுமைப்படுத்துவதால் அவரை மீட்டு தரக்கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணின் கணவர் தனது 8 வயது மகனுடன் வந்து மனு அளித்தார்.

சிப்காட் பகுதியை சேர்ந்த அருண்ராஜ் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வரும் நிலையில், அவரது சலீமா பீ தனது தோழி ஒருவரின் மூலமாக டூரிஸ்ட் விசாவில் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சலீமா பீ, தான் வேலை செய்யும் இடத்தில் தன்னை அடித்தும், தகாத முறையில் திட்டியும் கொடுமைப்படுத்துவதாகவும், செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொள்வதாகவும் கூறி தன்னை எப்படியாவது மீட்கும்படி வீடியோ பதிவு ஒன்றை தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments