சொத்துவரி நிலுவை - "டாப் 100" பட்டியலை வெளியிடும் சென்னை மாநகராட்சி

0 232

அதிகபட்ச சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் "டாப் 100" பட்டியலை வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் மாமன்ற கூட்டத்தில் இசைவு பெற்று, இணையத்தில் இப்பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள சில சொத்து உரிமையாளர்கள் 1 கோடி ரூபாய்க்கு மேல் நீண்ட காலமாக சொத்துவரி நிலுவை வைத்துள்ளதாகவும், இவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் மாநகராட்சி வெளியிடும் பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments