தேனியில் கழிவு நீர் செல்வது தொடர்பான தகராறில் பெண் மீது கடும் தாக்குதல்... 8 பேர் மீது வழக்கு பதிவு 5 பேரை கைது

0 205

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் வீட்டு கழிவு நீர் செல்வது தொடர்பான தகராறில் வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களை வாடகைதாரர் தரப்பினர் கடுமையாக தாக்கியதில் 3 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கும், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சசிகுமாருக்கும் தொடர் தகராறு ஏற்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த சண்டையில் பாலமுருகனின் மனைவி ஜெயலட்சுமி சசிகுமாரின் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சசிக்குமாரின் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினர்கள் தகராறு குறித்து அறிந்ததும், ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஜெயலட்சுமியை கட்டை மற்றும் கம்பால் அடித்ததும், காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கும் வீடியோ வெளியான நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ள கண்டமனூர் போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடிவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments