அரசு மருத்துவமனையில் டி.எம்.எஸ் இயக்குநர் திடீர் ஆய்வு

0 232

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு மூன்று வேளையும் வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மருத்துவர்களிடமும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments