நிலத்தகராறில் வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் 4 பேர் கைது.. வேனில் ஏற மறுத்து சாலையில் புரண்ட பெண்கள்..

0 278

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறு தொடர்பாக மத்தியஸ்தம் செய்த வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் இரு பெண்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.

வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு நிலத்தை விற்று கிரையம் செய்வதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 21ஆம் தேதியன்று மாணிக்கத்தின் வழக்கறிஞர் பாலாஜி அலுவலகத்தில் மத்தியஸ்தம் நடைபெற்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு ராமசாமி, அவரது மகள்கள் ரம்யா, சௌம்யா, அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் பாலாஜியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார், ராமசாமி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அப்போது, வேனில் ஏற மறுத்து அடம் பிடித்து சாலையில் புரண்ட ரம்யா, சௌம்யாவை போலீசார் குண்டுக்கட்டாக அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments