குட்கா பொருட்களை போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்த ஊர்க்காவல் படை வீரரை கைது செய்த போலீஸார்

0 241

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்ததாக, சென்னையில் ஊர்க்காவல் படை வீரரை போலீஸார் கைது செய்தனர்.

துரைப்பாக்கம் பகுதியில் ஹோண்டா சிட்டி காரில் அரை டன் அளவிற்கு குட்கா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்த போலீஸார், காரின் உரிமையாளரான ஊர்க்காவல் படை வீரர் குணசேகரை கைது செய்தனர்.

அவருடன் சேர்ந்து கடைகளுக்கு குட்கா சப்ளை செய்து வந்ததாக மேலும் 2 பேரை கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments