சென்னை-ஆலப்புழா ரயிலில் ரகளை செய்த போதை இளைஞர்கள்.. ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் வேதனை

0 230

சென்னையிலிருந்து ஆலப்புழாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டை அடைந்தபோது ரயிலில் ஏறிய 6 இளைஞர்கள் புகை பிடித்தும், சத்தமாக பாட்டு பாடியும் இடையூறு செய்ததாக சக பயணிகள் புகாரளித்துள்ளனர்.

போதையில் இருந்ததாக கூறப்படும் அந்த இளைஞர்களை ரயில் பயணி ஒருவர் தட்டிக்கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

கொலை மிரட்டல் விடுத்தபடி, திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்ற இளைஞர்கள் குறித்து கோவை போத்தனூர் ரயில்வே போலீசாரிடம் புகாரளித்தபோது, அது தங்கள் எல்லைக்குள் வராது எனவும், திருப்பூர் சென்று புகாரளிக்குமாறு போலீசார் பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments