குப்பைத் தொட்டியை வைப்பதில் பிரச்சனை.. திமுக பெண் நிர்வாகியைத் தாக்கியதாக அதிமுக பெண் நிர்வாகி கைது

0 214

சென்னையில் குப்பைத் தொட்டியை வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக பெண் நிர்வாகியைத் தாக்கியதாக அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேத்துப்பட்டில் புதிதாகக் குடிவந்த அதிமுக நிர்வாகி இளவரசி என்பவர், தனது வீட்டு முன்பு இருந்த மாநகராட்சி குப்பைத் தொட்டியை அங்கிருந்து அகற்றியதாகக் கூறப்படுகிறது.

அதுகுறித்து திமுக வட்டச் செயலாளரான வான்மதி என்பவரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். வான்மதியும் மாநகராட்சி அதிகாரியிடம் பேசி மீண்டும் அதே இடத்தில் குப்பைத் தொட்டியை வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளவரசி, தனது ஆதரவாளர்களுடன் வான்மதியின் அலுவலகம் சென்று வாக்குவாதம் செய்ததோடு, அலுவலகத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்தி, வான்மதியையும் அவரது ஆதரவாளரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments