விசாரணையில் மயக்கம் அடைந்த காவலர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்

0 274

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பது தொடர்பாக நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு ஆஜரானபோது மயக்கம் அடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆயுதப்படை காவலர் ஆறுமுக பாண்டியன்,  குணமடைந்து  டிஸ்சார்ஜ் ஆனார்.

அப்பொழுது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணித்ததாகவும், தான் ஓசியில் பயணித்ததாக பேருந்து நடத்துநர் தவறான தகவலை பரப்பியதாகவும் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments