வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்... நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் அறிவிப்பு

0 344

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளைக் காலை மத்திய கிழக்கு வங்கக் கடல் பகதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments