தொடர் மழையால் சுமார் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்... ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

0 197

தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கோடை சாகுபடியாக 20 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில்,கொரடாச்சேரி, வரம்பியம், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளன. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவிட்டுள்ள நிலையில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments