ஒரே நாள் இரவில் 2 ஜவுளிக் கடைகளில் திருட்டு போலிச் சாவி தயாரித்த முன்னாள் ஊழியர் கைது....

0 198

சீர்காழியில், போலி சாவி தயாரித்து ஜவுளிக் கடையில் 2 லட்ச ரூபாய் திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கலிவரதன் என்பவர் சீர்காழியில் 2 ஜவுளி கடைகளை நடத்திவருகிறார். வெவ்வேறு பகுதிகளில் உள்ள அந்த இரு கடைகளிலும், ஒரே நாள் இரவில், கல்லா பெட்டியில் இருந்த 2 லட்ச ரூபாய் மாயமானது.

பூட்டை உடைக்காமல் பணம் எப்படி திருடுபோனது என குழம்பிபோன போலீசார் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் முகமது பாகத் என்பவனை பிடித்து விசாரித்தபோது, இதற்கு முன் அங்கு வேலை பார்த்தபோது இரு கடைகளுக்கும் போலி சாவி தயாரித்து வைத்திருந்தும், தற்போது அவற்றை வைத்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments