செல்போன் வாங்க சேர்த்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய மாணவிக்கு உதவி... பி.எஸ்.சி மயக்கவியல் படிப்பு சேர்க்கைக்கு ஆணை வழங்கினார் முதலமைச்சர்

0 346

செல்ஃபோன் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் மாணவி ஷரினா கிறிஸ்ட்டுக்கு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மயக்கவியல் படிப்பில் சேர்வதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

ப்ளஸ் டூ வகுப்பில் 468 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஷரினா கிறிஸ்ட்டுக்கு, பி.எஸ்.சி. மயக்கவியல் பட்டப்படிப்பு படித்திட உதவிடுமாறு அவரது தாயார் விடுத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இதற்கான உத்தரவை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments