தனியார் பொருட்காட்சியை பூட்டி சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்... அரசு அதிகாரிக்கு பணம் கொடுக்காததால் சீல் வைப்பு என உரிமையாளர் வீடியோ பதிவு

0 237

சென்னை, பல்லாவரம் அருகே ஆட்டுதொட்டி பகுதியில் உரிய அனுமதியின்றியும், பொதுமக்களுக்கான உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாமலும் செயல்பட்டதாக தனியார் பொருட்காட்சி திடலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கண்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான மைதானத்தில், அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று பொருட்காட்சியை நடத்தியதாகவும், பொருள்காட்சி இணை இயக்குநரான தமிழ் செல்வராஜ் கேட்ட பணத்தை கொடுக்காததால் சீல் வைத்துள்ளதாக பொருட்காட்சி உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் வீடியோ பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments