முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ராஜீவ் சௌக், படேல் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாசகங்களை எழுதியவர் கைது

0 266

டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக், படேல் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்களை எழுதிய நபரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

பரேலி பகுதியைச் சேர்ந்த அங்கித் கோயல் அந்த நபர் நன்கு படித்து வங்கி ஊழியராகப் பணியாற்றுவதாகவும், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்படும் அவரை, மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியிருப்பதாகவும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments