கோயம்பேடு சந்தையில் நாளுக்கு நாள் உயரும் காய்கறிகளின் விலை... காய்கறிகளின் வரத்துக் குறைவே விலை உயரக் காரணமென வியாபாரிகள் தகவல்

0 253

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக காய்கறிகள் விலை உயர்ந்து வரும் நிலையில்  பீன்ஸ்,வெங்காயம்,கத்தரிக்காய்,பச்சை மிளகாய், பூண்டு விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

 கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் தற்போது 220 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூண்டை பொறுத்தவரை விலை  குறைய வாய்ப்பில்லை என கூறும் வியாபாரிகள் அடுத்த மாதத்திற்குள் 500 ரூபாய் வரை விலை உயரக்கூடும் என தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments