தமிழகத்தின் மீது பிரதமருக்கு மிகுந்த மதிப்பு உள்ளது: அண்ணாமலை...

0 348

பூரி ஜெகந்நாதர் ஆலய பொக்கிஷ அறை சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் பேசியது ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சு என அறிக்கை ஒன்றில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் பேசியிருப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் மீது பிரதமருக்கு மிகுந்த மதிப்பு உள்ளதாகவும், ஆனால் மாநிலங்களை அந்தந்த மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும் என பிரதமர் பேசியிருப்பதாகவும் அண்ணாமலை தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments