பூங்காவிற்குள் சிலர் இருப்பதை அறியாமல் பூட்டு போட்ட ஊழியர்...

0 405

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் பூங்காவில் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் உள்ளே சிலர் இருப்பதை கவனிக்காமல் நகராட்சி ஊழியர் பூட்டிச் சென்றதால் 3 குழந்தைகளுடன் 2 பெண்கள் வெளியே வர இயலாமல் தவித்தனர்.

நகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்த நிலையில், பணியாளர் ஒருவர் பூங்காவின் பூட்டுக்குரிய சாவியை எடுத்து வந்து திறந்து உள்ளே இருந்தவர்களை விடுவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments