நாட்டில் உள்ள பெண் சக்திகளை மஹா சக்தியாக மாற்றுவோம்: பிரதமர் மோடி

0 215

 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் உள்ள சக்திகளை மஹா சக்தியாக மாற்றுவதற்கு தாம் ஓய்வும் சேர்வுமின்றி உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

தாம் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பெண்கள் சக்தியுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தமது அன்னையிடம் ஆசி பெறாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது இதுவே முதன்முறை என்றார்.

தற்போது கங்கைத் தாய் தன்னை தத்தெடுத்துக் கொண்டதாக தெரிவித்த அவர், பெண்களுக்கான திட்டங்களை தமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட இண்டியா கூட்டணியினர் மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கு செய்து வரும் பிரயத்தனங்களை தாம் முறியடிப்பது உறுதி என்றும் பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments