ஒசூரியில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை

0 203

ஓசூரில் மாலையில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழையால் நகரின் பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

37 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் சுமார் நான்கு அடி உயரத்திற்கும் மேல் மழை நீர் தேங்கியது. அந்த வழியாக செல்ல வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் ஒசூர் மூக்கண்டப்பள்ளி முதல் தமிழக - கர்நாடக மாநிலத்தின் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1 மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments