மேல்நிலை நீர் தேக்க தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருவி போல கொட்டிய தண்ணீரில் உற்சாகமாக குளித்த சிறுவர்கள்

0 218

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல கொட்டியது. அந்த தண்ணீரில் சிலர் வாகனங்களை சுத்தப்படுத்தியதுடன், சிறுவர்கள் உற்சாகமாக குளித்தனர்.

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. தொட்டியில் தண்ணீரை ஏற்றி சோதனை செய்வதற்காக அழுத்தம் பார்க்க முயன்ற போது குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments