49 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு... பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்கள்

0 355

5-ஆம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு பெட்டிகளுக்கு ஊழியர்கள் சீல் வைத்து ஸ்டிராங் ரூம்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

முன்னதாக, மும்பையில் நடந்த வாக்குப்பதிவில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளிலும் ஏராளமானோர் வாக்குரிமையை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments