கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப்க்கு தகுதி..

0 1040

ஐ.பி.எல். தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

அதன் அடிப்படையில், நாளை நடைபெறும் முதல் குவாலிஃபயர் போட்டியில், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளும், நாளை மறுநாள் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

முதல் குவாலிஃபயர் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இதில் தோற்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மே 24-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மோதும்.

இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி, மே 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments