ஆரணி டவுன் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தின் சிசிடிவி கட்சி வெளியானது

0 295

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி ரோடில் உள்ள தனியாருக்கு சொந்தமான எடை மேடையில் பணியாற்றும் முருகனின் இருசக்கர வாகனத்தை அவரது அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றார். 

இதுகுறித்து முருகன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய வாகன சோதனையில்,  திருடப்பட்ட  இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த  ஐயப்பன் என்பவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து முருகனிடம் ஒப்படைத்தனர்.

இரு சக்கர வாகனத்தை திருடிய நபரை சிசிடிவி கேமரா காட்சியில் தெரிந்தும்  அவரை கைது செய்யாமல் வேறு நபரை போலீசார் கைது செய்ததாக முருகன் அதிருப்தி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments