வீட்டில் இருந்த கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

0 478

திருத்தணி அருகே தனியார் கல்லூரி ஒன்றில் முதல் ஆண்டு படித்து வந்த மாணவி கோடை விடுமுறையை ஒட்டி வீட்டில் இருந்த போது, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டில் சகஜமாக இருந்து வந்த அப்பெண்ணின் மரணத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இறந்த பெண்ணின் செல்ஃபோனை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும் விரைவில் காரணம் கண்டறியப்படும் எனவும் போலீசார் உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments