யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே-31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

0 215

பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து, பெண் போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள வழக்கில் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனு, வரும் 20-ஆம் தேதி, திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, பாதுகாப்புக்காக சென்றபோது, சவுக்கு சங்கர் ஆபாசமாக பேசியதாக திருவெறும்பூர் காவல் பெண் உதவி ஆய்வாளர் அளித்த புகாரில் சவுக்கு சங்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments