சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பலகைகளை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு ஆணையார் உத்தரவு

0 183

சென்னை மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையார் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலையோரங்கள், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிறுத்தங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments