சீன இறக்குமதி பொருட்களுக்கு மதிப்பீடு வழங்க லஞ்சம் கேட்ட சென்னை துறைமுக சுங்கத்துறை அதிகாரி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு

0 209

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு தர மதிப்பீடு வழங்க லஞ்சம் கேட்டதாக சென்னை துறைமுக சுங்கத்துறை மதிப்பீட்டாளர் அதிகாரி மனீஷ் என்பவர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை நிறுவனம் இறக்குமதி செய்த பி.வி.சி. பூசப்பட்ட பொருட்களுக்கு தரம் மதிப்பீடு பெற்று ஷிப்பிங் செய்யும் நிறுவனம் நடத்தி வரும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மதுக்குமார் என்பவர் மனீஷை அணுகியபோது அவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஒரு ஸ்டார் மதிப்பீடுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 10 ஸ்டார்களை வழங்க 50 ஆயிரம் ரூபாயை மனீஷ் லஞ்சமாக கேட்ட ஆடியோவை ஆதாரமாகவைத்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments