நகை சீட்டு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடை உரிமையாளரை தேடி வரும் போலீசார்

0 355

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 நகை கடைகள் நடத்தி நகை சீட்டு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

எஸ்விஎஸ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்த சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த சபரி சங்கர் என்பவர் அனைத்து நகை கடைகளையும் மூடி விட்டு கடந்த ஆண்டு தலைமறைவானார்.

இந்த வழக்கு விசாரணை சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து சபரி சங்கரின் வங்கி கணக்கை முடக்கி இருப்பதுடன், நகை கடைகளிலும் சோதனை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments