போதையில் ஆட்டோவை கவிழ்த்த ஆட்டோ ஓட்டுநர்... காவல்துறையிடம் தகாத வார்த்தையில் பேசி அட்ராசிட்டி

0 347

சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஜங்ஷன் அருகே கஞ்சா போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து போலீசாரிடம் தகாத வார்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டார். வெற்றி என்ற அந்த இளைஞருக்கு அபராதம் விதிக்க முயன்றதால் சாலையின் நடுவே அமர்ந்து தகராறு செய்ததுடன், அந்த வழியாக சென்ற லாரி டயருக்கு கீழே படுத்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.

அரைமணி நேரமாக அந்த நபருடன் போராடிய போக்குவரத்து போலீசார், பின்னர் சட்டம் ஒழுங்கு போலீசார் துணையுடன் அவரது நண்பரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். போதை தெளிந்த பின் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments