24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்பனை.. போலீசார் தடுத்து நிறுத்த தவறிவிட்டதாக கிராம மக்கள் புகார்

0 239

தருமபுரி மாவட்டம் போளையம்பள்ளி கிராமத்தில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் நடைபெற்றுவரும் மது விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் கம்பைநல்லூர் காவல் நிலையம் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரிடம், கள்ளச்சந்தையில் மது விற்கும் சபரி என்பவர் ஊரே வந்து எதிர்த்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

சபரி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவனது தாய், தந்தை மற்றும் தம்பியை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments