ஏ.டி.எம்.மில் பணம் போட வந்தவர்களிடம் பணம் பறித்த காவலர்கள்

0 333

சென்னை கீழ்ப்பாக்கம் ஈவேரா சாலை கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் போடச் சென்ற தயிர் வியாபாரியிடம், ஹவாலா பணம் வைத்திருக்கிறாயா எனக் கேட்டு மிரட்டி 34,500 ரூபாயை பறித்து சென்றதாக ஐ.சி.எஃப். போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இதே போன்று, தி. நகர் ஜி.என்.செட்டி சாலை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் பணம் டெப்பாசிட் செய்யச் சென்ற ஏற்றுமதி நிறுவன பணியாளரிடம் போலீஸ் உடையில் வாக்கி டாக்கியுடன் சென்று, ஹவாலா பணமா எனக் கேட்டு மிரட்டி 50 ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றதாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவலர் ராகுலை உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments