தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரையும், அவரது அண்ணியையும் அரிவாளால் வெட்டிய 3 பேரை தேடும் போலீசார்

0 265

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரையும், அவரது அண்ணியையும் அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர் ஞானப்பிரகாசம் என்பவர் புதன்கிழமை இரவு ஏகேஎஸ் தியேட்டர் சாலையில் நின்றிருந்தபோது வந்த 3 பேர் கும்பல் திடீரென அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.

அருகில் டீக்கடை நடத்தி வரும் அவரது அண்ணி புனித மேரி தடுக்க முயன்றபோது அவரையும் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியுள்ளது. கடந்த மாதம் மதுபோதையில் காரை ஓட்டி வந்த கார்த்திக், ஞானப்பிரகாசத்தின் காரை இடித்ததால் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் தனது கூட்டாளிகள் சங்கிலி பாண்டி, பேச்சிமுத்து ஆகியோருடன் வந்து வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments