அரசுப் பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அரிவாள்.. போலீசார் தீவிர விசாரணை..!

0 326

சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற படுக்கை வசதிக் கொண்ட அரசு விரைவுப் பேருந்தின் 9-ஆம் எண் படுக்கையின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பயணிகளை இறக்கி விட்டு வண்ணார்பேட்டை பணிமனைக்கு சென்ற பேருந்தை சுத்தம் செய்த போது ஆயுதங்கள் பற்றி தூய்மைப் பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்திய போலீசார், தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆயுதங்களில் இருந்த கை ரேகைகளையும் பதிவு செய்தனர்.

ஏதேனும் குற்றச்செயல்களை நிகழ்த்துவதற்காக ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments