சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதிய பைக்.. விபத்தில் ஒன்றரை வயது குழந்தை தலையில் காயமடைந்து உயிரிழப்பு

0 391

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையின் இடது புறத்தில் நிறுத்தி இருந்த லாரியின் மீது பைக் மோதியதில், முன்புறம் அமர்ந்திருந்த ஒன்றரை வயது குழந்தை முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது.

வியாசர்பாடி சி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் குடும்பத்துடன் அம்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பிய போது நிலைதடுமாறி லாரி மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சங்கர், அவரது மனைவி மற்றும் மூன்றரை வயது குழந்தைக்கு காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments