தரமற்ற முறையில் தார் சாலை அமைப்பு - கவுன்சிலர்கள் சாலை மறியல்

0 296

சீர்காழியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாகக்கூறி பணிகளை தடுத்து நிறுத்திய நகர்மன்ற உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பெயர்ந்து கையோடு எளிதாக வரும் வகையில் தரமற்று இருப்பதாக கூறியும், சாலையின் திட்ட மதிப்பீடு,

ஒப்பந்ததாரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அ.தி.மு.க மற்றும் தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சாலை போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments