மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை குத்திக் கொன்ற 2 பேர் கைது

0 332

தேவகோட்டையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை குத்திக் கொன்று கண்மாயில் புதைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அங்குள்ள ஜீவா நகரை சேர்ந்த பாண்யராஜனை கடந்த மாத இறுதியில் இருந்து காணவில்லை என்று குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார்,

பாண்டியராஜன் ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் கோவையில் விற்பனை செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனை விற்றவர்கள் யார் என அடையாளம் கண்டு விசாரித்ததை அடுத்து பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

கண்மாயில் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து போலீசார் பிரேத பரிசோதனை செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments