பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

0 253

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதி லட்சுமிபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளர்மதி என்பவரிடமிருந்து மொபெட்டில் வந்த 2 பேர் அவர் கையில் வைத்திருந்த செல்போன் பையை பிடுங்கி கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது அவர் சத்தம் போட்டதையடுத்து அங்கிருந்த பொது மக்கள் இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கிய போது ஒருவர் தப்பி ஓடிய நிலையில் பிடிபட்ட வரை வாயில் ரத்தம் வடிந்த நிலையில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தப்பி ஓடிய நபர் வழியில் செல்வோர் மற்றும் போக்குவரத்து போலீஸ்காரர் உட்பட பலரிடம் செல்போன் பறித்து வந்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments